ஆந்திராவில் தேர்வு மையம் அருகே மயங்கி விழுந்த 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி கம்மவாரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சதீஷ் கூடூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வில் கலந்து கொள்ள தினமும் ஊருக்கு சென்று வந்தார். இந்நிலையில் இன்று காலை தேர்வு தொடங்கும் முன் சக மாணவர்களுடன் தேர்வு மையத்திற்கு முன் இருந்த சதீஷ் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் மாணவர் உயரிழந்தார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக மாணவர் உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.